< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்தவர் சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விஷம் குடித்தவர் சாவு

தினத்தந்தி
|
11 Oct 2022 5:17 PM GMT

குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்தவர் உயிரிழந்தார்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் நம்பாயி வலசை கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது50). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 2 மகன்களும் திருமண வயதில் மகளும் உள்ளனர். மகளுடன் வசித்து வந்த மருதமுத்து மற்றும் கிருஷ்ணவேணி குடும்ப பிரச்சினை காரணமாக குளிர் பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் கிருஷ்ண வேணி சிகிச்சை பெற்றுவருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்