< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கடற்படை தினத்தையொட்டி 540 மாணவர்கள் கப்பலில் பயணம்
|2 Dec 2022 10:22 PM GMT
கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்திய கடற்படை செய்திருந்தது.
கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்து சென்று கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்திய கடற்படை செய்திருந்தது.
அதன்படி, சென்னையில் உள்ள 4 பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த பயணத்தின் போது மாணவர்கள் ஆயுதப்படைகளில் சேர ஊக்குவிக்கப்பட்டனர்.