< Back
மாநில செய்திகள்
செஞ்சி  அரசு கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு  நாளை மறுநாள் தொடங்குகிறது
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சி அரசு கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது

தினத்தந்தி
|
15 Aug 2022 5:22 PM GMT

செஞ்சி அரசு கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.


செஞ்சி,

செஞ்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கு முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், நாளை மறுநாள் (புதன்கிழமை) 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

இதில் பி.ஏ. ஆங்கில பிரிவுக்கும், 18-ந்தேதி(வியாழக்கிழமை) பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும், 22-ந்தேதி (திங்கட்கிழமை) பி.காம், பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளுக்கும், 23-ந்தேதி பி.ஏ. தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்