< Back
மாநில செய்திகள்
வகுப்பறையில் சுருண்டு விழுந்த மாணவர் சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வகுப்பறையில் சுருண்டு விழுந்த மாணவர் சாவு

தினத்தந்தி
|
19 July 2023 6:30 PM GMT

வகுப்பறையில் சுருண்டு விழுந்த பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மகவீன் (வயது 16). இவர் தேனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த மகவீன் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மகவீன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மகவீன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்