< Back
மாநில செய்திகள்

நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாணவன் பலி

1 Sept 2023 12:15 AM IST
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாணவன் பலி
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் தர்ஷன் (வயது12). இவன் தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து பஸ்சில் ஏறி தகட்டூர் சமாதியடி பஸ் நிறுத்தத்தில் இறங்கினான். அப்போது சாலையை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் அவன் மீது மோதியது. இதில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.