< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு

தினத்தந்தி
|
19 May 2023 6:53 PM GMT

மொரப்பூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் இறந்தான்.

மொரப்பூர்

மொரப்பூர் அருகே உள்ள சந்தப்பட்டியை சேர்ந்தவர் ரகு. இவரது மகன் சஞ்சய் (வயது 17). இவன் சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி இருந்தான். மாணவன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவன் சந்தப்பட்டி ஏரிக்கு சென்றான். அப்போது மாணவனை பாம்பு கடித்துள்ளது. இது குறித்து மாணவன் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தான். இதையடுத்து அவர்கள் மாணவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்