கிருஷ்ணகிரி
மாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி சாவு
|கிருஷ்ணகிரியில் மாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி இறந்தார்.
பிளஸ்-2 மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 51). இவர் கிருஷ்ணகிரியில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வடிவழகி (47). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் மதுமித்ரா (17). பிளஸ்-2 முடித்துள்ளார். மாணவி மதுமித்ரா கிருஷ்ணகிரி அருகே மேல்புதூரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கு கடந்த, 13-ந் தேதி வீட்டின் மொட்டை மாடியில் நின்று செல்போனில் மாணவி பேசி கொண்டிருந்தார்.
பலி
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மதுமித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.