< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அரசு பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி சேதம்
|28 May 2023 8:06 PM GMT
அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி சேதமடைந்தது.
முசிறி:
முசிறி அருகே திருச்சி-சேலம் புறவழிச்சாலையில் சம்பவத்தன்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் தொட்டியம் வட்டம், திருநாராயணபுரத்தை சேர்ந்த அசோக்குமார்(வயது 38) ஓட்டினார். திருச்சி நோக்கி உமையாள்புரம் அருகே சென்றபோது, அந்த பஸ் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து டிரைவர் அசோக்குமார் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.