< Back
மாநில செய்திகள்
குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுப்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுப்பு

தினத்தந்தி
|
5 Oct 2022 6:55 PM GMT

மன்னார்குடியில் குளம் தூர்வாரும் பணியின் போது குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

மன்னார்குடி:

மன்னார்குடியில் குளம் தூர்வாரும் பணியின் போது குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

கற்சிலை கண்டெடுப்பு

மன்னார்குடி நகரில் உள்ள ருக்குமணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு பொக்லின் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குளத்தின் வட பகுதியில் மண்ணை தோண்டி எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று கண்ெடடுக்கப்பட்டது. .அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர்.அம்மன் சிலை போன்று தோற்றமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது.

முந்தைய காலத்தில்...

இது குறித்து மன்னார்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி பாதுகாப்பாக மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் அப்பகுதியில் உள்ள பெரியோர்கள் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்