< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா

தினத்தந்தி
|
16 July 2022 5:10 PM GMT

நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா

நாமக்கல் செல்லப்ப கவுண்டர் பூங்காவில் மகாத்மா காந்தி சிலை அமைப்பு குழுவின் சார்பில், மகாத்மா காந்தியின் சிலை புதிதாக நிறுவப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. சிலை அமைப்பு குழு தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏகாம்பரம் வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் நடராஜன், டாக்டர் இளங்கோவன், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் கோவிந்தராஜ் காந்தியவாதிவின் சிறப்பு குறித்து பேசினார். நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ., கம்பன் கழக செயலாளர் அரசு பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி சிலையை திறந்து வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி நிர்வாகி சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்