< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான இளையோர் தடகள போட்டி: பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான இளையோர் தடகள போட்டி: பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்

தினத்தந்தி
|
25 Aug 2022 7:12 PM GMT

மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் பெரம்பலூர் மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்.

கிருஷ்ணகிரியில் 39-வது மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற 18 வயது பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதியை சேர்ந்த மாணவி அபர்ணா 1 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். இதையடுத்து, அவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை நேரில் சந்தித்து பதக்கம் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், தடகள பயிற்சியாளர் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர். அபர்ணா பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்