< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
திருப்பூர்
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

தினத்தந்தி
|
21 Jan 2023 12:25 PM GMT

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 615 பேர் பிளஸ்-2 தேர்வையும், 31 ஆயிரத்து ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 640 மாணவர்கள், 15 ஆயிரத்து 361 மாணவிகள் என 31 ஆயிரத்து ஒருவரும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 106 மாணவர்கள், 13 ஆயிரத்து 450 மாணவிகள் என 24 ஆயிரத்து 556 பேரும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 747 மாணவர்கள், 13 ஆயிரத்து 868 மாணவிகள் என 25 ஆயிரத்து 615 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ்-2 வகுப்புக்கு மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

ஹால்டிக்கெட்

பிப்ரவரி மாதம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான ஹால்டிக்கெட் வருகிற 31-ந் தேதி முன் வழங்கப்பட உள்ளது. தேர்வு நடக்கும் பள்ளிகள், தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியை மாவட்ட கல்வித்துறை தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அந்த மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்