< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாமக்கல்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
8 Sep 2023 6:37 PM GMT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வருகிற 15-ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

பேச்சுப்போட்டிகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 15-ந் தேதி, மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.

காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். அண்ணாவும் மேடைப் பேச்சும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

முதல் பரிசு ரூ.5 ஆயிரம்

இதில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் உமா வழங்க உள்ளார். கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாக இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்