< Back
மாநில செய்திகள்
பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விழுப்புரத்தில் 2 நாட்கள் நடக்கிறது
விழுப்புரம்
மாநில செய்திகள்

பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விழுப்புரத்தில் 2 நாட்கள் நடக்கிறது

தினத்தந்தி
|
11 Sep 2023 6:45 PM GMT

பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விழுப்புரத்தில் 2 நாட்கள் நடக்கிறது என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறையின் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மாகாந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 15, 19 ஆகிய 2 நாட்களில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்