< Back
மாநில செய்திகள்
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
1 Nov 2022 7:12 PM GMT

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.

அரியலூர் மாவட்டத்தில், முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி வருகிற 14-ந் தேதியன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதில் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப்புறா நேரு என்ற தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் தொடங்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்