< Back
மாநில செய்திகள்
வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
29 Sept 2023 12:59 AM IST

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது. ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி ஆகிய சுவாமிகளுக்கு பக்தர்கள் கொடுத்த விபூதி, சந்தனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் அபிஷேகங்கள் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சன்னதி முன்பு கூடியிருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடராஜருக்கு சன்னதி உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்