< Back
மாநில செய்திகள்
வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
23 Sep 2023 6:45 PM GMT

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

வைகுண்டபதி பெருமாள் கோவில்

புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பெருமாள் நேற்று சத்தியநாராயணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திரளான பக்தர்கள் தரிசனம்

சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அதுபோல் கோவில் வளாகத்திலுள்ள பால ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் முன்பு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்