< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
14 Oct 2023 6:45 PM GMT

புரட்டாசி சனிக்கிழமையைெயாட்டி ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமையைெயாட்டி ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைராக்கிய ஆஞ்சநேயர்

தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக ஆஞ்சநயேருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தயிர், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓரடியம்புலம் கரியமாணிக்கபெருமாள்

அதேபோல் ஓரடியம்புலத்தில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாககோடையான் சீனிவாச பெருமாள் கோவில், கோவில்பத்து என்னை ஆளும் கண்ணபெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பெருமாள் கோவில் சன்னதிகளில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருமருகல்

திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன், சம்பந்தம் குருக்கள் ஆகியோர் செய்து இருந்தனர். அதேபோல் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சிக்கல்

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் அமைந்துள்ள கோலவாமனப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிக்கல் அருகே ஆவராணி கிராமத்தில் உள்ள நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் பிரகாரத்தில் உள்ள வரத ஆஞ்சநேயர், பொரவச்சேரி பக்த ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்