< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
13 Aug 2023 5:44 PM GMT

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்கள் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்