< Back
மாநில செய்திகள்
மதுரை-பழனி, கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மதுரை-பழனி, கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில்கள்

தினத்தந்தி
|
26 Jan 2023 6:19 PM GMT

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தையொட்டி மதுரை-பழனி, கோவை-திண்டுக்கல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தையொட்டி மதுரை-பழனி, கோவை-திண்டுக்கல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

பழனி முருகன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை-பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல்-கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று, இன்று என 2 நாட்கள் மற்றும் பிப்ரவரி 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை என மொத்தம் 5 நாட்கள் இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி மதுரை-பழனி இடையே இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 06080) மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரெயில் (வண்டி எண் 06079) மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

பழனி வழியே...

இதேபோல் கோவை-திண்டுக்கல் ரெயில் (எண் 06077) காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 06078) மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்