< Back
மாநில செய்திகள்
ஊராட்சி தலைவிகளுக்கு சிறப்பு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

ஊராட்சி தலைவிகளுக்கு சிறப்பு பயிற்சி

தினத்தந்தி
|
18 July 2022 6:05 PM GMT

ஊராட்சி தலைவிகளுக்கு சிறப்பு பயிற்சி

பெண் ஊராட்சி தலைவர்களின் திறனை வளர்க்கும்விதமாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் மகளிர் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வட்டார வளமைய தலைமை அலுவலர் மணிபாரதி பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் பயிற்றுனர்கள் அன்புத்துரை, சகாயசெல்வி, அனிதா ஆகியோர் மகளிர் பற்றிய அரசு கொள்கைகள், இந்திய அரசியல் சாசனம், பெண் ஊராட்சிமன்ற தலைவர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள், பணிகள், தலைமைத்துவ பண்புகள், மகளிரும் சட்டங்களும், மகளிருக்கான நிதியுதவி திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் பயிற்சி அளித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 210 பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்