< Back
மாநில செய்திகள்
தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
மாநில செய்திகள்

தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
14 Jun 2024 1:13 PM GMT

தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பக்ரீத் பண்டிகையையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது. மறுமாா்க்கமாக நாகர்கோவில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும்(16ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலிருந்து 17ஆம் தேதி புறப்பட்டு திங்கட்கிழமை(18ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடைகிறது.

மேலும் செய்திகள்