< Back
தமிழக செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
கரூர்
தமிழக செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
31 Aug 2023 12:30 AM IST

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தளவாப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்