< Back
மாநில செய்திகள்
சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
28 May 2022 11:36 AM GMT

நீடாமங்கலம் சந்தானராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோல் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமிக்கு வடைமாலை, அருகம்புல் மாலை அணிவித்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். லெட்சுமாங்குடி ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவில், சாத்தனூர் வெங்கட்ரமணசாமி ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்