< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
|8 July 2023 6:45 PM GMT
ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.