< Back
மாநில செய்திகள்
சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
9 July 2022 6:03 PM GMT

சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபால் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கட ஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்