< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
24 April 2023 6:30 PM GMT

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் உடையார்பாளையத்தில் நாளை நடக்கிறது.


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டாரங்களுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணியளவில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்