< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
26 Dec 2022 6:40 PM GMT

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் உடையார்பாளையத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் இந்த மாத்திற்கான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலவலகத்தில் நடைபெறவுள்ளது. உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்