< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்: 37 கிராம பஞ்சாயத்துகளில் இன்று சிறப்பு வேளாண் முகாம் - கலெக்டர் அறிவிப்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சிபுரம்: 37 கிராம பஞ்சாயத்துகளில் இன்று சிறப்பு வேளாண் முகாம் - கலெக்டர் அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Jun 2022 3:28 AM GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு வேளாண் முகாம் இன்று நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு வேளாண் முகாம் இன்று நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி இரண்டில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.


இந்த சிறப்பு முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு முகாம் நடைபெறும் 37 கிராம பஞ்சாயத்துக்கள் வருமாறு:-

சிறுகாவேரிப்பாக்கம், முத்தியால்பேட்டை, கிளாய், கோனேரிக்குப்பம், அரும்புலியூர், மேல்மதுரமங்கலம், ஆசூர், திருவானைக்கோயில், செங்காடு, தாமல், பெருநகர், துளசாபுரம், திம்மசமுத்திரம், காரனை, வெங்காடு, அத்திவாக்கம், ஒழையூர், கொளத்துர், ஏனாத்துர், சாலவாக்கம், வரதராஜபுரம், வாரணவாசி, சிறுதாமூர், ஐயப்பந்தாங்கல், இலுப்பப்பட்டு, கம்மாளம்பூண்டி, கோவூர், பழையசீவரம், ராவத்தநல்லுர், ஆதனுர், ஐமச்சேரி, மொளச்சூர், கெருகம்பாக்கம், கட்டவாக்கம், பிச்சிவாக்கம், கொட்டவாக்கம், சந்தவேலூர் ஆகிய 37 கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்