< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
20 March 2023 6:42 PM GMT

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் கோவிலில் பங்குனி மாத சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர், திருக்காடுதுறை, குந்தாணிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.

மேலும் செய்திகள்