< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
9 Jun 2023 7:10 PM GMT

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பாலசுப்பிரமணிய கோவிலிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்