< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
26 Feb 2023 6:36 PM GMT

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருத்திகையையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்