< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
|3 Aug 2022 6:15 PM GMT
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் தவிட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.