< Back
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
1 Aug 2022 6:56 PM GMT

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நொய்யல் அருகே முத்தனூரில் வருண கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்