< Back
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
16 July 2022 6:49 PM GMT

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருணகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்