< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
|24 Feb 2023 6:53 PM GMT
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.