< Back
மாநில செய்திகள்
காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
3 Sep 2022 6:37 PM GMT

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை பூஜையில் கொடுத்து திரும்ப பெற்றுக் கொண்டனர்இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்