< Back
மாநில செய்திகள்
கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம்
சிவகங்கை
மாநில செய்திகள்

கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
2 Aug 2022 6:00 PM GMT

திருப்புவனத்தில் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி உள்ளது. கருட பஞ்சமி அன்று கருடாழ்வாரை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் கருட பஞ்சமியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள், மற்ற தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராகவன் செய்திருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்