< Back
மாநில செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
2 April 2023 6:48 PM GMT

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர் மாவட்டம் கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்