< Back
மாநில செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
4 Nov 2022 6:42 PM GMT

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்