< Back
மாநில செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
24 July 2022 6:35 PM GMT

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் சீனிவாச பெருமாள் சமேத பூதேவி ஸ்ரீதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாள் சமேத பூதேவி ஸ்ரீதேவிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து துளசி மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்