< Back
மாநில செய்திகள்
கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
11 Nov 2022 6:33 PM GMT

கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்