< Back
மாநில செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
27 March 2023 6:50 PM GMT

திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு, காளான் வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை இணைந்து நடத்திய இந்த பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜா தொடங்கி வைத்து காளான் உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பங்கு மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும் வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா) பேசுகையில், இளைஞர்கள் சுயதொழில் முனைவோராக வளர இப்பயிற்சியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்கூறினார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறினர். இப்பயிற்சியில் இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்