< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
|1 March 2023 6:32 PM GMT
திறன் மேம்பாட்டு பயிற்சி
தொண்டி,
திருவாடானை வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் வயது வந்தோர் கல்வி மையங்களில் பணி புரிந்து வரும் தன்னார்வலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. கல்வி அலுவலர் வசந்த பாரதி தொடங்கி வைத்தார். வக்கீல் சசிகுமார் அழகுகலை நிபுணர் சோனியா ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கான சட்ட தீர்வு, அழகுக்கலையின் மூலம் அதிக லாபம் சம்பாதித்தல் குறித்தும் விளக்கம் அளித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஒன்றிய புதிய பாரதத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபாஸ்டின் ஜெயராஜ், தனலட்சுமி காளமேகலை, 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.