< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை உயர்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை உயர்வு

தினத்தந்தி
|
24 May 2022 5:30 PM GMT

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை உயர்ந்துள்ளது.

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 452 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 4 ஆயிரத்து 72 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.671-க்கு விற்பனையானது. நேற்று அதிகபட்ச விலை கிலோவிற்கு ரூ.16 உயர்ந்தது. அதிகபட்சமாக ரூ.687-ம், குறைந்தபட்சமாக ரூ.321-ம், சராசரியாக ரூ.523.83 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.21 லட்சத்து 33 ஆயிரத்து 437 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்