< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை அதிகரிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 7:30 PM GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,286 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,115 கிலோவாக குறைந்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு தேவை அதிகரித்ததால் நேற்று விலை அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.22 அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.514-க்கும், குறைந்தபட்சமாக ரூ.310-க்கும், சராசரியாக ரூ.417.53-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 586-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

மேலும் செய்திகள்