< Back
மாநில செய்திகள்
பட்டுக்கூடு விலை அதிகரிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

பட்டுக்கூடு விலை அதிகரிப்பு

தினத்தந்தி
|
1 Sep 2023 7:30 PM GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 707 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 1,318 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.604-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.58 அதிகரித்தது. அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.662-க்கும், குறைந்தபட்சமாக ரூ.324-க்கும், சராசரியாக ரூ.568.31-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

மேலும் செய்திகள்