< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தினத்தந்தி
|
8 Aug 2023 7:30 PM GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,871 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 674 கிலோவாக குறைந்தது. அதே நேரத்தில் தேவை அதிகரித்ததால் அதன் விலை நேற்று கிலோவிற்கு ரூ.46 உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.570-க்கு விற்பனையானது. பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.616-க்கும், குறைந்தபட்சமாக ரூ.298-க்கும், சராசரியாக ரூ.501.35-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 389-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

மேலும் செய்திகள்