< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில் வரத்து குறைவால் பட்டுக்கூடுகள் விலை உயர்ந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில் வரத்து குறைவால் பட்டுக்கூடுகள் விலை உயர்ந்தது

தினத்தந்தி
|
13 July 2023 7:30 PM GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,814 கிலோவாக (1¾ டன்) இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1531 கிலோவாக (1½ டன்) குறைந்தது. பட்டுக்கூடுகள் வரத்து குறைந்த நிலையில் தேவை அதிகரித்ததால் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.447-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.61 விலை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.508-க்கும், குறைந்தபட்சமாக ரூ.287-க்கும், சராசரியாக ரூ.427.83-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 132 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்