< Back
மாநில செய்திகள்
மனைவிக்கு அரிவாள் வெட்டு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மனைவிக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
26 May 2022 7:10 PM GMT

மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குன்னம் அருகே உள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 48), விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராமசாமி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று ராஜேஸ்வரி வயலில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராமசாமி தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தான் கையில் வைத்து இருந்த அரிவாளால் ராஜேஸ்வரி கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராமசாமியை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்